ADDED : பிப் 20, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: கோபி அடுத்த, வெள்ளாங்கோவில் சில்லமடையை சேர்ந்தவர் மல்லநாயக்கர், 64, விவசாயி. இவர் நேற்று காலை பெருந்துறை அடுத்த சரளை பகுதியில், மொபட்டில் சென்றார்.
அப்போது, அவ்வழியாக வந்த வேன், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மல்லநாயக்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.