/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி
/
விவசாய சங்கத்தினர் டிராக்டரில் பேரணி
ADDED : ஜன 27, 2025 03:11 AM
ஆத்துார்: விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக்கோரியும், அதற்கான சட்டம் இயற்றக்கோரியும், பஞ்சாப் எல்லையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித்சிங்டல்-லேவால் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகிறார்.
இதற்கு ஆதரவாக, ஆத்துார், விநாயகபுரத்தில், ஐக்கிய விவசா-யிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா தலைமையில், டிராக்டர், கார் என, 200க்கும் மேற்பட்ட வாகன பேரணி நடந்தது. உடை-யார்பாளையம் வழியே சென்ற பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட் முன் முடிந்தது. தமிழக விவசாய சங்க துணைத்தலைவர் டில்லி-பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, ஐக்கிய விவ-சாய சங்க பொதுச்செயலர் கோவிந்தன், மாவட்ட செயலர்கள் சர-வணன், நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

