sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி

/

சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி

சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி

சேதம் அடைந்த பாலம் மூழ்கி 2 மாவட்ட விவசாயிகள் அவதி


ADDED : டிச 05, 2024 07:53 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: இரு மாவட்டங்களை இணைக்கும்படி கட்டப்பட்ட தரைப்-பாலம் சேதமான நிலையில், தற்போது மழைநீரில்

மூழ்கியுள்-ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே இனாம் பைரோஜி ஊராட்-சியில் புதுப்பாளையம் உள்ளது. அங்கிருந்து

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் வழியே வெண்ணந்துார், ராசிபுரத்துக்கு சாலை செல்-கிறது. இதன் நடுவே,

திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 40 ஆண்டு-களுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தில்

ஆங்-காங்கே விரிசல் விழுந்து மிகவும் சேதம் அடைந்துள்ளது. இரு மாதங்களுக்கு முன், நாமக்கல் மாவட்ட எல்லை

பாலத்தில் அரிப்பால், பெரிய பள்ளம் விழுந்து பாதசாரிகள், இருசக்கர வாக-னங்கள் மட்டும் சென்று வந்தனர்.

சேலத்தில் ஒரு வாரமாக கொட்டிய மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது.

இதில் பள்ளம் மேலும் பெரிதாகியுள்-ளது. 4 நாட்களாக ஆற்றில் வரும் தண்ணீர் குறையாததால், தரைப்பாலம்

மூழ்கி பாதசாரிகள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பாலத்தை சுற்றியுள்ள இரு மாவட்ட

விவசா-யிகள், வயல்கள், தோப்புகளுக்கு சென்று வர முடியாமல் சிரமப்ப-டுகின்றனர். குறிப்பாக விதை, உரம்,

விளை பொருட்கள் கொண்டு சென்று வரவும், தென்னந்தோப்புகளில் இருந்து டிராக்டர், லாரிகள் மூலம் தேங்காய்

எடுத்து வரவும் வழியின்றி தவிக்கின்றனர்.2 மாதத்துக்கு முன் கடிதம்இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, 'தரைப்பாலம் போக்குவரத்துக்கு

லாயக்கற்றது என, 3 மாதங்க-ளுக்கு முன்பே எச்சரித்து அறிவிப்பு செய்துள்ளோம். புதிதாக உயர்மட்ட பாலம்

கட்ட, 5 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்-படும். சேலம் மண்டல அளவில், 2 கோடி ரூபாய் மதிப்பு திட்-டங்கள் மட்டும்

செயல்படுத்த முடியும். அதற்கு மேல் எனில், தலைமையகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் தான் செய்ய

முடியும். இரு மாதங்களுக்கு முன், உயர்மட்ட பாலம் கட்ட அனு-மதி கேட்டு, சென்னைக்கு கடிதம்

அனுப்பியுள்ளோம். உத்தரவு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us