sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

/

தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது

தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன் கைது


ADDED : நவ 28, 2025 01:05 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர், செக்கானுார், ஜெ.ஜெ., நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்குமார், 37. இவரது மனைவி சந்தோஷ்குமரி, 28. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சந்தோஷ்

குமரி, 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, சுரேஷ்குமார் வீடு அருகே உள்ள கம்பத்தில், தெருவிளக்கு எரியவில்லை.

அதன் இணைப்பு உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பெயின்டர்களான, ஜீவா, 22, அவரது தம்பி ராகுல், 25, 'பியூஸ்' கேரியரை பிடுங்கி வைத்தது தெரிந்தது. அவர்களிடம்

சுரேஷ்குமார், பியூஸ் கேரியரை பொருத்துங்கள் என கூறிவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

சிறிது நேரத்தில் அங்கு சென்ற சகோதரர்கள், சந்தோஷ்குமரியை திட்டி கத்தியால் தாக்க முயன்றனர். தடுத்த சுரேஷ்குமாரின் கையில், காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு காரில், ஜீவா, ராகுலின் தந்தையான ரியல் எஸ்டேட் உரிமையாளர் கார்த்தி, 45, சென்றார். அவர், 'துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள்' என, மகன்களிடம்

கூறினார்.

மக்கள் கூட, மூவரும் காரில் தப்பினர். சுரேஷ்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தோஷ்குமரி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரித்து, கார்த்தி, ஜீவாவை நேற்று கைது செய்து ராகுலை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us