ADDED : பிப் 20, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: பவானியை சேர்ந்த சுகுமார் மனைவி மணிமேகலை, 40. இவர், மேட்டூர், மாசிலாம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் பிரேமானந்த், 36, என்பவர், 'சைன்' பைக்கில் அமர்ந்து கொண்டு, சேலத்தில் இருந்து பவானி நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.
மாலை, 5:45 மணிக்கு மங்கரங்கம்பாளையத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் பின்புறம் மோதியது. இதில் தடுமாறி விழுந்த மணிமேகலை மீது, எதிரே வந்த ஆக்-டிவா மொபட் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

