/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
609 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி
/
609 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி
ADDED : ஜன 29, 2026 04:42 AM
சேலம்: சேலம் சாரதா மகளிர் கல்லுாரியில், 574 மாணவியர், புனித தெரேசாள் தொழிற்பயிற்சி நிலையத்தில், 35 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
அமைச்சர் ராஜேந்திரன், மடிக்கணினி வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கலை, அறி-வியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில், முதல் கட்டமாக, 5,609 பேருக்கு மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று, 609 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கணினி கல்வியை எளிதாக்கி, கணினி கல்வி மற்றும் தொழில்நுட்ப உத-விகள் வழங்கி, மாணவ, மாணவியரை தொழில்முனைவோராக மாற்றவும், ஆராய்ச்சித்துறையில் சாதிக்க நினைப்-போரை ஊக்கப்படுத்தவே விலையில்லா மடிக்கணினி வழங்கப்ப-டுகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ.,ரவிக்குமார், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர்
உடனிருந்தனர்.

