sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமிக்கு வாந்தி

/

பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமிக்கு வாந்தி

பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமிக்கு வாந்தி

பல்லி கிடந்த 'ஸ்வீட் பீர்' குடித்த சிறுமிக்கு வாந்தி


ADDED : மே 03, 2025 12:18 AM

Google News

ADDED : மே 03, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:சேலம் மாவட்டம், மேட்டூர், காவேரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 38. இவர்களின் மகள்கள் பிரியதர்ஷினி, 16, தேவதர்ஷினி, 14. இவர்கள், மேட்டூர் அரசு பள்ளியில் படிக்கின்றனர்.

இருவரும் நேற்று முன்தினம், ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு உறவினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது, சிறுமியரின் சகோதரர் பாலமுருகன், 20, அருகே உள்ள பேக்கரியில், ஸ்வீட் பீர் எனப்படும் குளிர்பான பாட்டில்கள் நான்கு வாங்கினார்.

தொடர்ந்து, வீட்டுக்கு சென்று குடும்பத்தினர், சிறுமியர் அதை குடித்தனர். ப்ரியதர்ஷினி குடித்தபோது, சிறு பொருள் அவரது வாயில் பட்டதும் துப்பியுள்ளார். பின், பாட்டிலில் இருந்ததை எடுத்து பார்த்த போது, அது பல்லி அல்லது அரணை போல தெரிந்தது.

நேற்று மாலை, பிரியதர்ஷினிக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதால், அவரை ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓமலுார் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவி, குளிர்பான கடையில் விசாரித்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us