sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அரசு அலுவலக டிரைவர் கைது

/

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அரசு அலுவலக டிரைவர் கைது

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அரசு அலுவலக டிரைவர் கைது

'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி அரசு அலுவலக டிரைவர் கைது


ADDED : ஆக 14, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுவதாகவும், அதை வாங்கி விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும் என கூறி, அதற்கு சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் என, பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் கென்னடி புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, சேலம், தஞ்சாவூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 13 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வந்தனர்.

இந்நிலையில் இரு மாதங்களாக தேடப்பட்டு வந்த, மேட்டூர் உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் அரசு டிரைவராக இருந்த விஜயகணேசன், 42, என்பவரை, நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், ரிசர்வ் வங்கி முத்திரை பதித்த பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் இதுவரை, 200க்கும் மேற்பட்டோரிடம், 30 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது, விசாரணையில் தெரிய

வந்துள்ளது.






      Dinamalar
      Follow us