ADDED : ஜூலை 27, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஓமலுார், அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என கோஷம் எழுப்பினர். தலைவி ராணி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கினர்.