ADDED : நவ 25, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி, கந்தன்வளவை சேர்ந்-தவர் சம்பூரணம், 50. இவரது கணவர் பழனிசாமி, 65. இவர், ரவி என்பவர் காட்டில் தங்கி, ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் சம்பூரணம், கணவரை பார்க்க சென்றபோது அவர் அங்கு இல்லை. இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது, 3 நாட்களாக பழனிசாமி வராதது தெரிந்தது. இதனால் சம்பூரணம் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார், பழனிசா-மியை தேடுகின்றனர்.