/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டி கொலை வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்
/
மூதாட்டி கொலை வழக்கு 2 பேருக்கு குண்டாஸ்
ADDED : அக் 14, 2024 04:51 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே அம்மன்கோவில் பட்டியை சேர்ந்தவர் பென்னி-யம்மாள், 85. கணவர் இறந்த நிலையில் தனியே வசித்தார்
. இவ-ருக்கு ஒரு மகன், இரு மகள்கள். கடந்த ஆக., 3ல், வீட்டில் இருந்த பொன்னியம்மாளை, நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்து நாமக்கல், பரமத்தியில் உள்ள காவிரியாற்றில் மர்ம நபர்கள் வீசினர். இதுவரை உடல் கிடைக்கவில்லை.இந்த வழக்கில், மெக்கானிக்குகளான, தொள-சம்பட்டி, பேராமரத்துாரைச் சேர்ந்த சித்துராஜ், 32, பெரியேரிப்-பட்டி மாரிமுத்து, 20, தாரமங்கலம், கருக்குப்பட்டி கூலித்தொழி-லாளி தனுஷ்குமார், 22, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் சித்துராஜ், தனுஷ்குமாரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க,
கலெக்டர் உத்தரவிட்டார்.