ADDED : ஜூலை 24, 2026 01:52 AM
பனமரத்துப்பட்டி: நிலவாரப்பட்டியில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தில் காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி நேற்று நடந்தது.
பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத் தலைமை வகித்தார். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்-டக்கலை வல்லுனர் முல்லைமாறன், கத்திரி சாகுபடியில் சமர்ச்சீர் உர மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா, காய்கறி பயிர் சாகுபடி குறித்து விளக்கினார்.அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, காய்கறி பயிர் சாகு-படி குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதில், வேளாண் துறையின் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கப்-பட்டது. உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா, உதவி வேளாண் அலுவலர் பிரின்சி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
