/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?
/
ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?
ADDED : அக் 12, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜருகுமலையில் மொபைல்
போன் சிக்னல் கிடைக்குமா?
பனமரத்துப்பட்டி, அக். 12-
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மலை கிராமத்தில், சரிவர சிக்னல் கிடைக்காததால், மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஜருகுமலை மக்கள் கூறியதாவது:
மேலுார் கிராமத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மொபைல் போன் கோபுரம் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

