sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி

/

ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி

ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி

ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்கள்; பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி


ADDED : பிப் 26, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 26, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: ஒன்றிய தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அவர்கள் பயன்படுத்தி வந்த ஜீப்களை, ஒன்றிய பொறியாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என, அனுமதி அளித்து, ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் பொன்னையா அரசாணை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர்த்து மற்ற, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜன.,5ல் நிறைவடைந்தது. ஜன.,6 முதல் வரும் ஜூலை 5 வரை ஒன்றிய தலைவர்களுக்கு பதில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களில் தலைவர்கள் பயன்பாட்டுக்காக கடந்த, 18 மாதங்களுக்கு முன்பு தான், புதிதாக ஏ.சி., வசதியுடன் மகேந்திரா ஸ்கார்பியோ ஜீப்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்த ஜீப்களை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் வைத்து, அந்த வாகனங்களை ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் பணிகளை மேற்பார்வையிட பயன்படுத்தி கொள்ளலாம் என, அனுமதி அளித்து ஊரக வளர்ச்சித்துறை ஆணையாளர் பொன்னையா கடந்த ஜன.,20ல் அரசாணை மூலம் உத்தரவிட்டுள்ளார். இதே போல், ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர்களும் பணிகளை மேற்பார்வையிட, வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, உத்தரவு பிறப்பித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு நன்றி என, சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us