sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு

/

மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு

மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு

மல்லுாரில் சுரங்கப்பாதை அமைக்க நில அளவீடு


ADDED : ஜூன் 25, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, மல்லுார் - வீரபாண்டி சாலை குறுக்கே, சேலம் - கரூர் அகல ரயில்பாதை செல்கிறது. இதனால் தினமும், 10க்கும் மேற்பட்ட முறை, ரயில்வே கேட் மூடப்படுகிறது. பஸ், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதனால் ரயில் பாதையை கடக்க, மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை, மக்கள் நடத்தினர். அதன் பலனாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்து நிதி ஒதுக்கியது. தொடர்ந்து தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

நேற்று, சேலம் - கரூர் ரயில்பாதையில் மல்லுார், வேங்காம்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க, நில அளவீடு பணி நடந்தது. சேலம் வருவாய்த்துறையினர், ரயில்வே அதிகாரிகள், இப்பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us