ADDED : டிச 11, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தின், சேலம் கோட்டம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் முருகன் நாயனார் தலைமை வகித்தார்.
அதில் மத்திய அரசு, பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்தல்; காப்பீடு மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்தல்; குறைந்தபட்ச காப்பீடு தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உறுதிப்படுத்தல்; பாலிசி எடுப்பதற்கான வயதை, 65 ஆக உயர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கோட்ட செயலர் சிவமணி, மாநில செயலர் ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

