sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மூதாட்டி தோட்ட வீட்டுக்கு 4 ஆண்டுக்கு பின் 'வெளிச்சம்' 'போலீஸ் உங்கள் நண்பன்' நிரூபணம்

/

மூதாட்டி தோட்ட வீட்டுக்கு 4 ஆண்டுக்கு பின் 'வெளிச்சம்' 'போலீஸ் உங்கள் நண்பன்' நிரூபணம்

மூதாட்டி தோட்ட வீட்டுக்கு 4 ஆண்டுக்கு பின் 'வெளிச்சம்' 'போலீஸ் உங்கள் நண்பன்' நிரூபணம்

மூதாட்டி தோட்ட வீட்டுக்கு 4 ஆண்டுக்கு பின் 'வெளிச்சம்' 'போலீஸ் உங்கள் நண்பன்' நிரூபணம்


ADDED : ஜூலை 06, 2025 01:54 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, 'போலீஸ் உங்கள் நண்பன்' என கூறுவர். அதை நிரூபிக்கும் விதமாக, போலீசார் எடுத்த நடவடிக்கையால், தனியே வசித்து வந்த மூதாட்டியின் தோட்ட வீட்டுக்கு, 4 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோட்ட வீடுகளில் தனியே வசிக்கும் முதியோரை கண்காணித்து, பாதுகாப்பு அளிக்க, ஸ்டேஷன் போலீசாருக்கு சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பனமரத்துப்பட்டி போலீசார், திப்பம்பட்டி ஊராட்சி குள்ளப்பநாயக்கனுாரில், தோட்ட வீட்டில் தனியே வசிக்கும் ஆண்டாள், 70, என்பவரை கண்டறிந்தனர்.அவரிடம் விசாரித்ததில், கணவர் ஓய்வு பெற்ற பி.டி.ஓ., பொன்னு

சாமி இறந்துவிட்டதும், மகள் சென்னையில் வசிப்பதும் தெரிந்தது. மேலும் உறவினர்களுடன் சொத்து பிரச்னையால், 4 ஆண்டாக தார்சு வீட்டிற்கு மின் இணைப்பு பெற முடியாமல் இருட்டில்

தவித்து வந்ததும் தெரிந்தது.

இதனால் ஸ்டேஷன் போலீசார் அறிவுறுத்தல்படி, சோலார் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தினார். பின் பனமரத்துப்பட்டி போலீசார் பாதுகாப்பு கருதி, ஆண்டாள் வீட்டுக்கு மின் இணைப்பு பெற, மின் வாரிய அதிகாரிகளிடம் பேசினர். இதனால் இணைப்பு வழங்க, வாரிய அதிகாரிகள் முன் வந்தனர். நேற்று ஆண்டாள் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. போலீசாரின் முயற்சியால், 4 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு கிடைத்தது, மூதாட்டிக்கு

மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us