ADDED : பிப் 04, 2025 06:36 AM
ஆத்துார்: காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர்.
ஆத்துார், முல்லைவாடி நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாலகி-ருஷ்ணன் மகன் ஜீவா, 25. பி.பி.ஏ., படித்துவிட்டு, சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
தம்மம்பட்டி, நாகியம்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மகள் பவானி, 19, பிளஸ் 2 படித்த இவர், வீட்டில் இருந்து வருகிறார். இவர்கள், காதலித்து வந்த விவகாரம் அறிந்த இருவீட்டு பெற்-றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், நேற்று ஆத்துார், வடசென்னி-மலை பாலசுப்ரமணியர்
கோவிலில் பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும்
அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இத்திரும-ணத்தை பவானியின் பெற்றோர் ஏற்றுக்
கொள்ளாததால், பவா-னியை, ஜீவாவுடன் அனுப்பி வைத்தனர்.