ADDED : டிச 06, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார், பெரியேரிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 25. அமரகுந்தியில் பழைய டயர் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு, நேற்று காலை திறக்க வந்தார்.
அப்போது கடை முன்புறம் அடுக்கியிருந்த, லாரிகளின், 6 டயர்கள், ஸ்டெப்னி கார் டயர் ஒன்று காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் புகார்படி, தொளசம்பட்டி போலீசார் விசாரித்ததில், கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்த செந்தில், 40, திருடியது தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.