/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு மருத்துவமனைக்குபாம்புடன் வந்த நபர்
/
அரசு மருத்துவமனைக்குபாம்புடன் வந்த நபர்
ADDED : ஏப் 22, 2025 01:13 AM
சேலம்:தாரமங்கலத்தை சேர்ந்த சிவப்பிரகாசம், 45, தறி தொழில் செய்து வருகிறார். மேலும் பாம்பு பிடிக்கும் பணியையும் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று தாரமங்கலம்
பகுதியில் உள்ள மரக்கடையில், பாம்பு புகுந்துவிட்டதாக சிவபிரகாசத்திற்கு தகவல் கொடுத்தனர். மரக்கடைக்கு சென்ற சிவப்பிரகாசம், கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்க முயன்ற போது, அவரது கையை தீண்டியது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவப்பிரகாசம் பாம்புடன் வந்தது குறித்து, மருத்துவமனை போலீசார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து சென்று வனப்பகுதிக்குள் விட்டனர். பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபடும் சிவப்பிரகாசம் இதுவரை, 3,000 பாம்புகளை பிடித்துள்ளதாகவும், இதுவரை தீண்டாத நிலையில் தற்போது தீண்டி விட்டதாக, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.