/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு
/
நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு
ADDED : ஏப் 20, 2025 02:01 AM
மேட்டூர்:மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலை, 10.40 கி.மீ., நீளம் கொண்டது. அதில் பஸ்கள், லாரிகள், கார்கள் செல்வதற்கு, 7 மீ.,
அகலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மேட்டூர் அணை அடிவாரம் கால்வாய் பாலம் முதல், சென்றாய பெருமாள் கோவில் வரை, 7 கி.மீ., அகலப்படுத்தப்படும். இதனால் இருபுறமும் தலா, 1.5 மீ., விரிவுபடுத்தப்பட்டு, 10 மீ., ஆக அகலமாக்கப்படும். இதற்கு கடந்த, 3 நாட்களாக, மேட்டூர் உபகோட்ட நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், பணியாளர்கள், சாலை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில், சாலை விரிவாக்க பணி தொடங்கும் என, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறினர்.

