sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

/

24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை

24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை


ADDED : டிச 03, 2024 02:02 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 2-----

''அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து, 24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் மழையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டன. அங்கு முன்கூட்டியே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்காடு பிரதான சாலை, 60 அடி பாலம் அருகே, சின்னகல்வராயன் மலை பகுதியில், சாலை குறுக்கே மரம் விழுந்தது. உடனே அகற்றி போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை, உள்ளாட்சி, நெடுஞ்சாலைத்

துறையினர் சரிசெய்ய வேண்டும். மின் கட்டமைப்பு பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள், நீர்வழித்தடங்களில் தங்குதடையின்றி தண்ணீர் செல்ல, அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, அங்கன்வாடி கட்டடங்களை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து குழந்தைகள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆபத்தான நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்த வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் குளோரினேஷன் செய்யப்படுவதை உறுதி செய்து, சுகாதார முறையில் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து, 24 மணி நேரமும் எச்சரிக்கையோடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கலெக்டர் பிருந்தாதேவி, மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், டி.ஆர்.ஓ., மேனகா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us