/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : பிப் 11, 2025 07:29 AM
ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள, பழங்குடியின அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., சித்ரா ஆய்வு செய்தார்.
ஏற்காட்டில், பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்
தற்காலிக ஆசிரியராக பணியாற்றி-யவர், பெத்தநாயக்கன் பாளையம் நெய்யமலையை சேர்ந்த
இளையகண்ணு, 37. இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்-தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
சேலம் மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகள் விசாரித்த நிலையில்,
கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, இளையகண்ணுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின் அவரை, சேலம் மாவட்ட பழங்குடியினர் நல
திட்ட அலுவலர் சுகந்தி பரி-மளம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, பள்ளி மாணவிக-ளிடம் உரையாடி, தங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால்
தெரிவிக்கலாம் என்றார். அதை தொடர்ந்து, குழந்தைகளை பாது-காப்பாக பார்த்து கொள்ளுமாறு
தலைமை ஆசிரியரிடம் சித்ரா  கூறினார். அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணிதுணைத் தலைவர் ரவிசந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலு, சுரேஷ்-குமார் உடனிருந்தனர்.

