sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

/

ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஏற்காடு அரசு பழங்குடியின பள்ளியில் எம்.எல்.ஏ., ஆய்வு


ADDED : பிப் 11, 2025 07:29 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் உள்ள, பழங்குடியின அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ., சித்ரா ஆய்வு செய்தார்.

ஏற்காட்டில், பழங்குடியின நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்

தற்காலிக ஆசிரியராக பணியாற்றி-யவர், பெத்தநாயக்கன் பாளையம் நெய்யமலையை சேர்ந்த

இளையகண்ணு, 37. இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்-தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

சேலம் மாவட்ட குழந்-தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகள் விசாரித்த நிலையில்,

கொண்டலாம்பட்டி மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, இளையகண்ணுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின் அவரை, சேலம் மாவட்ட பழங்குடியினர் நல

திட்ட அலுவலர் சுகந்தி பரி-மளம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளி மாணவிக-ளிடம் உரையாடி, தங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால்

தெரிவிக்கலாம் என்றார். அதை தொடர்ந்து, குழந்தைகளை பாது-காப்பாக பார்த்து கொள்ளுமாறு

தலைமை ஆசிரியரிடம் சித்ரா கூறினார். அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணிதுணைத் தலைவர் ரவிசந்திரன், மாவட்ட பிரதிநிதி பாலு, சுரேஷ்-குமார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us