sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு

/

பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு

பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு

பருவ மழையால் மகசூல் பாதிப்பு வரத்து சரிந்து காய்கறி விலை உயர்வு


ADDED : அக் 31, 2025 12:51 AM

Google News

ADDED : அக் 31, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், பருவ மழையால் காய்கறி மகசூல் பாதிக்கப்பட்டதால், அதன் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை பகுதிகள் மட்டுமின்றி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்டவை, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அங்கு கடந்த வாரத்தை விட காய்கறி விலை, கிலோவுக்கு, 20 முதல், 30 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மொத்த வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:

பருவ மழையால் கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி பூக்கள் உதிர்ந்து அழுகிவிட்டன. முள்ளங்கி ஈரப்பதத்தில் அழுகல் ஏற்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ, 40க்கு விற்ற கத்தரிக்காய், இன்று(நேற்று) மார்க்கெட்டில், 70 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 80 ரூபாயாக உள்ளது. கிலோ வெண்டைக்காய், 40 முதல், 50 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 60 ரூபாய்; முருங்கைக்காய், 100 முதல், 120 ரூபாய், வெளிமார்க்கெட்டில், 150 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கிலோ, 20 ரூபாயாக இருந்த முள்ளங்கி, 70 முதல், 80 ரூபாய்; 20 ரூபாயாக இருந்த, காலிபிளவர், 50; பீர்க்கன்காய், 60 முதல், 70; பாகற்காய், 60; அவரை, 100 முதல், 120 ரூபாய் என, விலை உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us