sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

/

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு


ADDED : பிப் 04, 2025 04:32 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி : இடைப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இறைவணக்கம் பாடும்போது, தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்கும் முன் காலை, 9:10 மணிக்கு நடத்தப்படும் இறைவணக்க வழிபாட்டுக் கூட்டத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, பின் உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, பொது அறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டு, இறுதியாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று, இறைவணக்க வழிபாட்டுக் கூட்டம் நடந்தது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, பொது அறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டு, தேசிய கீதம் பாடாமலேயே கூட்டம் நிறைவு பெற்றது. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் விஜயா கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வு நடப்பதால், அந்த மாணவர்கள், 400க்கும் மேற்பட்டோர் இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்காமல், வகுப்பறைகளில் படித்துக் கொண்டு இருந்தனர். தேசிய கீதம் பாடினால், எழுந்து நிற்கும்போது அவர்களின் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பாடவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us