/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு
/
ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு
ADDED : ஆக 13, 2025 05:37 AM
சேலம்: வரும், 15ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல்-துறை சார்பில், 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.
இதனால் சேலத்தில், கிழக்கு கோட்ட அஞ்சலகம் சார்பில், நேற்று காலை, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கோட்ட கண்-காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வழியே சென்று, மீண்டும் கோட்ட அலுவலகத்தில் நிறைவு பெற்றது. துணை கண்காணிப்-பாளர் ராஜ்குமார், உதவி கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் உள்-பட அலுவலர்கள், போஸ்ட்மேன்கள் பங்கேற்றனர். இன்று மேற்கு கோட்ட அஞ்சலகம் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. இரு கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில், தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது.