/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி
/
தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி
தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி
தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி
ADDED : டிச 10, 2025 11:08 AM
ஓமலுார்: மத்திய இளைஞர் விவகாரத்துறை, விளை-யாட்டு அமைச்சகத்தால், டில்லி பாரத் அரங்-கத்தில், 29வது தேசிய இளைஞர் திருவிழா, வரும் ஜன., 10 முதல், 12 வரை நடக்க உள்ளது. அதில் நாடு முழுதும், 15 முதல், 29 வயதுக்குட்-பட்ட, 2,500 மாணவ, மாணவியர் பங்கேற்பர். அவர்களை தேர்வு செய்வதற்கு, சேலம் மாவட்ட அளவில்
நாட்டுப்புறப்பாடல், பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள், சேலம் பெரியார் பல்க-லையில் நேற்று நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். பெரியார் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள, 10 கல்-லுாரிகளை சேர்ந்த, 200 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். தொடக்க விழாவில், பல்கலை பதிவாளர் ராஜ், சேலம் மாவட்ட நோடல் அலுவலர்
அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

