sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பேட்ஜ் ஒர்க்' வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்

/

'பேட்ஜ் ஒர்க்' வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்

'பேட்ஜ் ஒர்க்' வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்

'பேட்ஜ் ஒர்க்' வேண்டாம்; புது சாலை போடுங்க... பணியை தடுத்து நிறுத்தி மக்கள் வலியுறுத்தல்


ADDED : நவ 21, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 21, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்,கொளத்துார், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி குரும்பனுாரில் இருந்து புலியூர் பிரிவு சாலை, 2.7 கி.மீ., மற்றும் குரும்பனுாரில் இருந்து சவேரியார்பாளையம் வரை, 2 கி.மீ., ஆகும். அதற்கான தார்ச்சாலைகள் அமைத்து, 10 ஆண்டுகள் ஆனதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தார்க்காடு சாலையில் புலியூர் பிரிவில் இருந்து குரும்பனுார் வரை, பள்ளங்களை சீரமைக்க, பொக்லைன் மூலம், 'பேட்ஜ் ஒர்க்' பணி நேற்று நடந்தது.மதியம், குரும்பனுார் கிராம மக்கள், புலியூர் பிரிவு பகுதியில் பொக்லைன் மூலம் நடந்த பணியை தடுத்து நிறுத்திவிட்டனர்.

தொடர்ந்து, கொளத்துார் ஒன்றிய அலுவலகம் சென்று, கமிஷனர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தனர். அதில், 'பேட்ஜ் ஒர்க் செய்வதற்கு பதில் புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.

இதுகுறித்து அண்ணாதுரை கூறுகையில், ''தார்ச்சாலை புதிதாக அமைக்க, ஒரு சாலைக்கு, 94 லட்சம் ரூபாய், மற்றொரு சாலைக்கு, 74 லட்சம் ரூபாய் செலவாகும். மக்கள் கொடுத்த மனுவை அடுத்து, தார்ச்சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us