ADDED : நவ 28, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழக அரசு உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி, சேலம் மாநகராட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பதவிக்கு, அம்மாபேட்டை மண்டலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கவுதமன் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் கமிஷனர் இளங்கோவன் முன்னிலையில் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.அதேபோல் மேட்டூர் நகராட்சியில் இந்திரா நகரை சேர்ந்த பிரகாஷ், 40; ஆத்துார் நகராட்சியில் ராஜாஜி காலனி பாபு, 43; இடைப்பாடி நகராட்சியில் முரளிகண்ணன் பதவி ஏற்றனர்.

