/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை
/
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை
ADDED : மார் 11, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஓமலுாரில்
நேற்று முன்தினம் நடந்தது.
ஒன்றிய தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலர் நுார்ஜகான், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்; காலி
பணியிடங்களை நிரப்புதல்; ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு
குடும்ப ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை
நிறைவேற்றினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர்
பங்கேற்றனர்.

