/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'
/
முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'
முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'
முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 07, 2025 03:50 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தாபிள்ளைக்காட்டை சேர்ந்தவர் நடராஜன், 41. இவர், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே வணிக வளா-கத்தில், கணினி சர்வீஸ் சென்டர் நடத்துகிறார். இவருக்கு சீலநா-யக்கன்பட்டி, ஏ.எம்.கே.நகரை சேர்ந்த, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ராஜேஷ், 47, என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர், 'ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்தால், 2 சதவீத வட்டி கிடைக்கும்' என கூறியுள்ளார். அதை நம்பி, 2021 முதல், பல தவணைகளாக, 34.75 லட்சம் ரூபாயை, நடராஜன் முதலீடு செய்-துள்ளார். அதற்கு, 2024 டிசம்பர் வரை வட்டி கொடுத்தவர், பின், வட்டி, அசல் எதுவும் தராமல் போக்கு காட்டினார். ஒரு கட்-டத்தில், ராஜேஷ் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். பாதிக்கப்பட்ட நடராஜன், சேலம் மாநகர் மத்திய குற்-றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரித்த போலீசார், மோசடி, நம்பிக்கை துரோகம், கொலை மிரட்டல் பிரி-வுகளில் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.