/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குமரகிரி ஏரியில் படகு சவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
குமரகிரி ஏரியில் படகு சவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு
குமரகிரி ஏரியில் படகு சவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு
குமரகிரி ஏரியில் படகு சவாரி நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : மே 18, 2025 05:27 AM
சேலம்: சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை, குமரகிரி ஏரியை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணியை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: ஏரி, 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்ளும்படி பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கும் பணி நடக்கிறது. ஆகாயத்தாமரைகளை அகற்றி, ஏரியில் படகு சவாரி செய்யும் விதமாக பணி மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், கன்னிமார் ஓடைகளை துார்வாரி, மழைக்காலங்களில் தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் சிறுபாலம், தடுப்புச்சுவர்களை அமைத்து, கழிவுநீர் தேங்காதபடி பணியை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மாநகர பொறியாளர் செல்வ நாயகம், மண்டல குழு தலைவர் தனசேகர், உதவி கமிஷனர் வேடியப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.