sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'

/

சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'

சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'

சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'


ADDED : டிச 24, 2024 07:47 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், தனியார் பள்ளியை மூடப்போவதாக தகவல் பரவியதால், பள்ளியை பெற்றோர் முற்-றுகையிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற, பா.ம.க.,- எம்.எல்.ஏ., திடீரென பள்ளி நிர்வாகிகள் காலில் விழுந்தார்.

சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் ஸ்ரீராமலிங்க வள்ளலார் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உதவி பெறும் பள்ளியாகவும், 6 முதல், பிளஸ் 2 வரை சுயநிதி பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியை மூடப்போவதாக, பெற்றோரிடையே தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று, 100க்கும் மேற்பட்ட பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த சேலம் மேற்கு பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், பெற்றோரிடம் தகவல் கேட்டறிந்தார். பின் போலீசார், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு-வார்த்தை நடத்தினர். சிறிது நேரம் அவரும் மறியலில் ஈடு-பட்டார். அப்போது பள்ளி நிர்வாகத்தினர், 'பள்ளியை மூடும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், தவறான தகவல்களை பரப்-பியுள்ளனர்' என, தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென, பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், நிர்வாகிகள் காலில் விழுந்து, 'பள்ளியை மூடக்கூடாது' என கேட்டுக்கொண்டார். இதை-யடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.பப்ளிசிட்டிக்காக ஸ்டண்ட்பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், காலில் விழுந்து பப்ளிசிட்டி தேடுவதையே வழக்கமாக வைத்துள்ளார் என, பிற கட்சியினர் கூறுகின்றனர். கடந்த, 2022 நவ., 8ல், முத்துநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையை மூடுமாறு, கடை ஊழியர்-களின் காலில் விழுந்தார். இந்தாண்டு ஜன.,24ல், சைக்கிள் வழங்கும் விழாவுக்கு அவர் தாமதமாக வந்ததால், பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர் காலில் விழுந்தார். நேற்று,'பள்ளியை மூடும் எண்ணம் இல்லை' என, பள்ளி நிர்வாகம் கூறிய பின்பும், காலில் விழுந்தார். இதை பிற கட்சி நிர்வாகிகள் 'பப்ளிசிட்டி தேடுகிறார்' என, கமென்ட் அடித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us