sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு

/

கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு

கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு

கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு


ADDED : ஏப் 23, 2025 01:13 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமால் பேசியதாவது:

நீதிமன்ற உத்தரவுபடி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏப்., 21 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இனி அந்தந்த அரசு துறை அதிகாரிகள் களமிறங்கி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கான செலவினங்களை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் அல்லது அமைப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.மா.கம்யூ., தாலுகா செயலர் முருகேசன், 'இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும்' என்றார். அதற்கு கமிஷனர், 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பதால், கொடி கம்பங்களை தாமதமின்றி அகற்றிக்கொள்ள வேண்டும்'

என்றார்.






      Dinamalar
      Follow us