sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்

/

விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்

விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்

விவசாய நிலத்தில் குழாய் பதிப்பு போலீஸ் பாதுகாப்புடன் தொடக்கம்


ADDED : ஜூலை 09, 2025 02:10 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி,சங்ககிரி, தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி, சீரங்ககவுண்டம்பாளையத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 7 பேர், நெடுங்குளம் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கம் மூலம், காவிரி ஆற்றில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, அரசு அனுமதி பெற்று, குழாய் பதிப்பு பணியை, 4 ஆண்டுக்கு முன் தொடங்கினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், முறைகேடாக குழாய் அமைப்பதாக கூறி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பணி நிறுத்தப்பட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட, 7 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மின்மாற்றிகள், அதன் கம்பங்கள் பதிக்கப்பட்டன. அப்போதும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து நில அளவீடு செய்யப்பட்டது. நேற்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், விவசாய நிலத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் பதிப்பு பணி தொடங்கியது.






      Dinamalar
      Follow us