/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'
/
சிறுமியிடம் பழகியவர் மீது பாய்ந்தது 'போக்சோ'
ADDED : ஜூலை 25, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, சேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, இரு மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நுால் மில்லில் வேலை செய்தார். அவருடன், ஓமலுார், புளியம்பட்டியை சேர்ந்த விக்ரம்ராஜ், 22, பணியாற்றினார்.
அவர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்தார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர், நேற்று முன்தினம் அளித்த புகார்படி கொண்டலாம்பட்டி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து விக்ரம்ராஜை தேடுகின்றனர்.