sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி

/

சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி

சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி

சரக்கு ரயிலில் சென்ற பொக்லைன்; சேலம் கோட்டத்தில் புது முயற்சி


ADDED : ஜன 29, 2025 07:19 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட வணிக மேம்பாட்டு பிரிவு, சரக்கு ரயில் மூலம் வணிகத்தை பெருக்கவும், வருவாய் அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை புல் மிஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து, பொக்லைன் வாகனங்களை, சரக்கு ரயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்முறை, இருகூரில் இருந்து, 30 வேகன் ரேக்கில், 70 பொக்லைன் இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, ஹரியானா மாநிலம், பல்லாப்கார் ஸ்டேஷனுக்கு அனுப்பப்பட்டது.

முன்னதாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதன்மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, 37.11 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இதேபோல் மாதத்துக்கு இரு முறை, பொக்லைன் வாகனங்கள் அனுப்பப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us