sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி

/

போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவு: சேலம் ஆயர் அஞ்சலி


ADDED : ஏப் 23, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையொட்டி, சேலம், மரவனேரியில் உள்ள ஆயர் இல்லத்தில் போப் பிரான்சிஸ் படத்துக்கு, நேற்று, மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் தலைமையில், முதன்மை குரு மைக்கேல் ஜான் செல்வம் உள்ளிட்ட திருச்சபையை சேர்ந்த பாதிரியார்கள், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தெரிவித்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

அதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மாநகராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், கோட்ட அலுவலகம், தபால் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள கொடி கம்பங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில், நேற்று முதல், 3 நாட்கள் பறக்கவிடப்படுகின்றன.

நாளை அஞ்சலி

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ''போப் பிரான்சிஸ் மறைவுக்கு சேலம், 4 ரோடு அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், ஏப்., 24(நாளை) மாலை, 6:00 மணிக்கு அஞ்சலி நிகழ்ச்சி, சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பங்கேற்று, அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us