ADDED : ஏப் 19, 2024 02:26 AM
காரிப்பட்டி:வாழப்பாடி
அடுத்த காரிப்பட்டியை சேர்ந்த சில பெண்கள், நேற்று முன்தினம் இரவு:
9:35 மணிக்கு, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்சில் ஏறினர்.
அப்போது
காரிப்பட்டியில் பஸ் நிற்காது என, கண்டக்டர் கூறி, 5 பெண் பயணியரை,
புது பஸ் ஸ்டாண்ட் அருகே வழியில் இறக்கிவிட்டார். இதையடுத்த
காரிப்பட்டி இளைஞர்கள், பெண்களின் உறவினர்கள், அன்று இரவு, 10:10
மணிக்கு, காரிப்பட்டி பைபாஸில் அந்த தனியார் பஸ்சை சிறை பிடித்தனர்.
தொடர்ந்து டிரைவர், கண்டக்டருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின், 11:00 மணிக்கு விடுவித்ததால் பஸ் புறப்பட்டது. அதேபோல்,
வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம்,
புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணியரை
ஏற்றாமல், விதிமீறி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மீது
நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.

