/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்
/
விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ADDED : டிச 11, 2025 06:13 AM
சங்ககிரி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, 2025 விதை, மின்சார சட்ட மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில், நேற்று விவசாயிகள் ஈடுபட்டனர்.
குறிப்பாக சங்ககிரி ஒன்றியத்தில் குறுக்குப்பாறையூர், கலியனுார், சுண்ணாம்புக்குட்டை, ஊஞ்சானுாரான்காடு பகுதிகளில் விவசா-யிகள் சங்கம் சார்பில், சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது. அதேபோல் வளையசெட்-டிப்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், சங்ககிரி வட்டார தலைவர் மணி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, தற்போது அறிமுகப்படுத்தியுள்ள விதை மசாதோ இயற்கை விவசாயத்தை காலாவதியாக்கிவிடும்; மின் உற்பத்தி வினியோகம் முழுவதும் தனியார் மயமாக்கப்படும் என்-பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் விவசா-யிகள் சங்கநிர்வாகிகள் பங்கேற்றனர்.

