/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் வளர்ச்சி ஊக்கி விவசாயிகளுக்கு வழங்கல்
/
பயிர் வளர்ச்சி ஊக்கி விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : ஆக 09, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில், உழவரை தேடி வேளாண் துறை முகாம் நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கி, தோட்டக்கலை சார்பில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டன.
தொடர்ந்த குரால்நத்தம் ஊராட்சி கோணமடுவில், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்தில், மானிய விலையில் சிறுதானிய விதை தொகுப்பு
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. துணை வேளாண் அலுவலர் ராமு, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.