sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கல்

/

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கல்

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கல்

குடிநீர் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கல்


ADDED : மே 24, 2024 07:09 AM

Google News

ADDED : மே 24, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி : இடங்கணசாலை நகராட்சி, 5வது வார்டு, மன்னாதகவுண்டனூரில் சிலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு, அப்பகுதியில் குடிநீர் இணைப்பை துண்டிக்க, நகராட்சி அலுவலர்கள் முயன்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கூறியதாவது: இதே வார்டின் பிற பகுதிகளிலும் பலர் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை. இங்கு மட்டும் உடனே இணைப்பை துண்டிக்க முயற்சிப்பது ஏன்? தேர்தல் பிரசாரத்தின்போது, நாமக்கல் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரனை முற்றுகையிட்டு, வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என புகார் அளித்தோம். அதனால் எங்கள் பகுதியில் மட்டும் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறீர்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து நகராட்சி அலுவலர்கள், 'குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு, 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது' என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us