ADDED : டிச 02, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் தபால் அலுவலகம் அருகே உள்ள, ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கடந்த 24ல் முகூர்த்தகால், கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகவேள்வி துவங்கி, நாடி சந்தானம், பூர்ணாஹுதி செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜை செய்த புனிதநீரை, சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து, 6:50 மணிக்கு ராஜகணபதி மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

