/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காருடன் புகையிலை பறிமுதல்் ராஜஸ்தான் வாலிபர் கைது
/
காருடன் புகையிலை பறிமுதல்் ராஜஸ்தான் வாலிபர் கைது
ADDED : ஆக 06, 2025 01:29 AM
ஓமலுார், ஓமலுார் அருகே புளியம்பட்டி பிரிவு சாலையில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த, 'வெர்னா, காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 330 கிலோ புகையிலை பொருட்கள்
இருந்தன.
அவற்றை காருடன் பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலம் குஜால்பூரை சேர்ந்த தினேஷ், 25, என்பவரை கைது செய்து, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
5 கடைக்கு 'சீல்'அதேபோல் மேட்டூர் நகராட்சி கொளத்துார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர்த்தி(பொ) முன்னிலையில், புகையிலை விற்பனையில் ஈடுபட்டதாக, ஒர்க்ஷாப் கார்னர், குள்ளவீரன்பட்டி, மாதையன்குட்டை, கூலிலைன், நவப்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு கடைகளுக்கு மேட்டூர் போலீசார் சீல்
வைத்தனர்.