sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

/

கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்

கு.க., செய்த பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்


ADDED : நவ 20, 2024 02:27 AM

Google News

ADDED : நவ 20, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பனைமடலை சேர்ந்த, லாரி டிரைவர் முருகன். அவரது மனைவி செல்லம், 35.

இவர்களுக்கு, நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 14 இரவு, 7:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில், 5வதாக ஆண் குழந்தை பிறந்தது.

சுகப்பிரசவமாக பிறந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு ஆத்துார் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்ய, செல்லம் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு நேற்று காலை, 7:00 மணிக்கு இறந்தார்.

உடல் பரிசோதனை செய்யாமல் தவறான முறையில் அறுவை சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தது தான், செல்லம் உயிரிழக்க காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடலில், கருமந்துறை - ஏத்தாப்பூர் நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், செல்லம் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரினர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் உறுதி அளித்தார்.

இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள், 4:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us