sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

/

கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை


ADDED : அக் 13, 2025 03:36 AM

Google News

ADDED : அக் 13, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாய்து சந்தைப்பேட்டையில் இருந்து, 10வது வார்டு வழியே தாசிக்காடு குட்டைக்கு கழிவுநீர் செல்கிறது. அங்கு, 10 ஆண்டுக்கு மேலாக கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி, பச்சை நிறமாகி துர்நாற்றம் வீசுகிறது. சில நாட்களாக பெய்த மழையால் குட்டை நிரம்பி, பெரமனுார் ஊராட்சி எல்லையில் உள்ள விவசாய வயல்களில் அதிகளவில் கழிவுநீர் பாய்கிறது.

இதுகுறித்து வாத்திக்காடு, மானியக்காடு, பெரமனுார் பெண் விவசாயிகள் கூறியதாவது:பனமரத்துப்பட்டியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர், வயலில் புகுந்து நிரம்பி நிற்கிறது. அரளி வயல் சேறு, சகதியாக மாறிவிட்டது. கழிவுநீரில் ஏராளமான பாம்பு, தேள் அடித்து வரப்பட்டு வயலில் கிடக்கின்றன. அரளி பூ பறிக்க செல்லவே அச்சமாக உள்ளது. வயலில் உள்ள சேற்றில் இறங்கி வேலை செய்தால் அரிப்பு, புண், சொறி, படை தொற்று ஏற்படுகிறது. கழிவுநீரால், 10 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டு, தீபாவளி நெருங்கும் நேரத்தில் வருமானம் இழந்து நிற்கிறோம். வயலில் உள்ள செடிகள், மரங்கள், வேர் அழுகி மடியும் நிலையில் உள்ளன. விவசாய கிணறு, ஆழ்துளை குழாய் கிணறு நீர் கெட்டுவிட்டது. விளைநிலத்தில் கழிவு நீர் விடுவதை, கலெக்டர் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us