ADDED : ஜூலை 12, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி, நங்கவள்ளி, வீரக்கல் ஊராட்சி பாசக்குட்டையில், 100 ஏரி திட்டத்தில், பட்டா நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் பொன்னுமரத்துப்பட்டி, பூனையன்காட்டுவளவு, சீரான்காட்டு வளவு கிராமங்களுக்கு செல்லக்
கூடிய தடம் மறைக்கப்படுவதாகவும், அதனால், 5 கி.மீ., சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும் எனக்கூறி, வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் நேற்று முன்தினம் மதியம், 12:15 மணிக்கு, பாசக்குட்டையில் கிராம மக்கள், மேட்டூர் - நங்கவள்ளி சாலையில், கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். நங்கவள்ளி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.