ADDED : மார் 17, 2024 02:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், ஆண்டிப்பட்டி அருகே சித்தர்பட்டியை சேர்ந்த நந்தகோபால், 60, மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு: கடந்த, 2019ல், சேலம், ஜங்ஷன், வசந்தம் நகரை சேர்ந்த லீலாவதி, அரசியல்வாதிகளுடன் பழக்கம் உள்ளது என நம்ப வைத்து, அரசு வேலை வாங்கி தருவதாக, 8 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.
தேனி மின்வாரியத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். நேரில் சென்றபோது அது போலி என தெரிந்தது. பணத்தை திரும்ப கேட்ட போது, 2 லட்சம் ரூபாயை தந்துவிட்டு, மீதி, 6 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.

