ADDED : நவ 04, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,  சேலம் கொண்டலாம்பட்டி, காக்காயன் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலைவாணி, இவரது அண்ணன் வரதராஜ் குடும்பத்தார் இடையே, பூர்வீக சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.
மேலும் சொத்து பாகப்பிரிவினை செய்யாமல் இருந்ததால், கடந்த சில நாட்களாக சொத்து குறித்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கலைவாணிக்கும், வரதராஜ் இடையே தகராறு
ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வரதராஜ், கொடுவாளை எடுத்து வந்து கலைவாணியின் கணவர் சண்முகத்தை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த சண்முகத்தை, உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகார்படி, கொண்டலாம் பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

