sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு

/

கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு

கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு

கால்வாயில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி ஒத்திவைப்பு


ADDED : ஆக 25, 2025 03:15 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: இளம்பிள்ளையை சேர்ந்த தறித்தொழிலாளி ராஜா, 37. அதே பகுதியை சேர்ந்த நண்பர் மணியுடன், நேற்று மேட்டூருக்கு சுற்-றுலா வந்தார். மதியம், 3:00 மணிக்கு இருவரும் அணை அடி-வாரம், குள்ளவீரன்பட்டி பாலம் அருகே குளித்துக்கொண்டிருந்-தனர்.

கால்வாயில் சில நாட்களாக வினாடிக்கு, 850 கனஅடி நீர் வெளி-யேற்றிய நிலையில், இழுவை அதிகம் இருந்தது. இதை உண-ராமல், நீச்சல் தெரிந்த ராஜா, கால்வாயில் குளித்தபோது தண்ணீர் இழுத்துச்சென்றது.

இதை அறிந்து, மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு நிலைய அலு-வலர்கள் வெங்கடேசன், சரவணன் தலைமையில், 17 பேர், மதியம், 3:30 மணி முதல், ராஜாவை தேடினர். மாலை, 6:30 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்று மீண்டும் தொழிலாளியை தேட, தீயணைப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us